சட்டவிரோதமாக வைத்திருந்த 51 ஆயிரம் துப்பாக்கிகள் ஒப்படைப்பு!
அவுஸ்ரேலியாவில் சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தானாக முன்வந்து அவற்றை ஒப்படைத்தால் தண்டனையிலிருந்து மன்னிப்பு வழங்கப்படும் என அவுஸ்திரேலியப் பிரதமர் Malcolm Turnbull தெரிவித்தார். அவுஸ்ரேலியாவில் துப்பாக்கி வைத்திருப்பதற்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டதைத் தொடர்ந்து, இவ்வாறான அறிவுப்பு வெளியானது. இந்த அறிவிப்பினை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னரே அவுஸ்திரேலியப் பிரதமர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதற்கான காலக்கெடு நேற்று (வெள்ளிக்கிழமை) முடிவடைந்துள்ளது. இந் நிலையில், இதுவரை சட்டவிரோதமாக வைத்திருந்த 51 ஆயிரம் துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் Malcolm Turnbull தெரிவித்துள்ளார்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed